என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்போரூர் அருகே கெமிக்கல் கம்பெனியில் வாலிபர் பலி
    X

    திருப்போரூர் அருகே கெமிக்கல் கம்பெனியில் வாலிபர் பலி

    திருப்போரூர் அருகே கெமிக்கல் கம்பெனியில் வாலிபர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருப்போரூர்:

    திருப்போரை அடுத்த ஆலத்தூரில் உள்ள சிப்காட் வளாகத்தில் தனியார் கெமிக்கல் தொழிற்சாலை உள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுசாந்த்போய் (வயது22) வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு அவர் பணியில் ஈடுபட்டபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் சுசாந்த்போய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×