என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுராந்தகம் அருகே காகித ஆலை எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி
    X

    மதுராந்தகம் அருகே காகித ஆலை எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

    மதுராந்தகம் அருகே காகித ஆலை எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கத்தை அடுத்த கீரல்வாடி கிராமத்தில் தனியார் காகிதம் மற்றும் அட்டை தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இங்கு பீகாரை சேர்ந்த அங்கித் தூபே (வயது24) உள்பட ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று மாலை கம்பெனியில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கித்தூபே எந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

    அவரை மற்ற தொழிலாளர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அங்கித்தூபே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தாமூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×