என் மலர்
செய்திகள்

வேளாங்கண்ணியில் அக்காள்-தம்பி தூக்குபோட்டு தற்கொலை
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பூக்காரத் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கலா. இவர்களுக்கு மீனு (24) என்ற மகளும், ஜெகன் (23) என்ற மகனும் உள்ளனர்.
வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பு ஆரியநாத்தெருவை சேர்ந்த பிரகாசமேரி என்பவரது வீட்டின் மேல் மாடியில் கலா தனது மகள்- மகனுடன் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
கடந்த சில நாட்களாக அவர்கள் வசித்துவரும் வீட்டின் கீழ் பகுதியில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று வீட்டின் கீழ்பகுதியில் வேலை நடந்து கொண்டிருந்தபோது கலாவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.
உடனடியாக மாடிக்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஆனால் உள்ளே இருந்து அலறல் சத்தம் கேட்டதால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது கலா வீட்டின் ஹாலில் உள்ள மின்விசிறியில் தூக்குமாட்டியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கலாவை மீட்டனர். பின்னர் மற்ற அறைகளுக்கு சென்று பார்த்தபோது கலாவின் மகள் மீனு, மகன் ஜெகன் ஆகியோரும் மின்விசிறிக்கு அருகே உள்ள கம்பியில் சேலையால் தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கலாவை நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் மற்ற இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்காள்-தம்பி இருவரும் ஏன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். தாயும் ஏன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்காள்-தம்பி தூக்குபோட்டு இறந்ததும், தாய் தற்கொலைக்கு முயன்றதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






