என் மலர்
செய்திகள்

குரோம்பேட்டை அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து 2 பேர் காயம்
குரோம்பேட்டை அருகே குடிசை வீட்டில் தீயை அணைத்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்து 2 பேர் காயம் அடைந்தனர்.
தாம்பரம்:
குரோம்பேட்டையை அடுத்த நெமிலிச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமணி. இவரது வீட்டில் தனலட்சுமி (33) என்பவர் வாடகைக்கு குடியிருக்கிறார்.
இந்த வீட்டின் மாடியில் குடிசை அமைத்து அதில் ரமணி தங்கி இருக்கிறார். இன்று காலை தனது வீட்டை பூட்டிவிட்டு கும்மிடிப்பூண்டியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு ரமணி சென்றுவிட்டார்.
இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்த தனலட்சுமி மாடியில் உள்ள ரமணியின் குடிசை தீப்பிடித்து எரிவதை பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார்.
உடனே தனலட்சுமியின் மகன் மகேஷ் (77), மற்றும் அக்கம் பக்கத்தினர் மேலே ஏறி தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக குடிசையில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்தது.
அப்போது எரிந்து விழுந்த தீ பக்கத்து ஓலை வீட்டிலும் விழுந்தது. இதனால் அந்த வீடும் தீப்பிடித்து எரிந்தது.
இதற்கிடையே, கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் மகேஷ் மற்றும் பத்மநாதன் ஆகியோர் காயம் அடைந் தனர். இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்பு படையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் மின்கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பிடித்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
குரோம்பேட்டையை அடுத்த நெமிலிச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமணி. இவரது வீட்டில் தனலட்சுமி (33) என்பவர் வாடகைக்கு குடியிருக்கிறார்.
இந்த வீட்டின் மாடியில் குடிசை அமைத்து அதில் ரமணி தங்கி இருக்கிறார். இன்று காலை தனது வீட்டை பூட்டிவிட்டு கும்மிடிப்பூண்டியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு ரமணி சென்றுவிட்டார்.
இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்த தனலட்சுமி மாடியில் உள்ள ரமணியின் குடிசை தீப்பிடித்து எரிவதை பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார்.
உடனே தனலட்சுமியின் மகன் மகேஷ் (77), மற்றும் அக்கம் பக்கத்தினர் மேலே ஏறி தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக குடிசையில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்தது.
அப்போது எரிந்து விழுந்த தீ பக்கத்து ஓலை வீட்டிலும் விழுந்தது. இதனால் அந்த வீடும் தீப்பிடித்து எரிந்தது.
இதற்கிடையே, கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் மகேஷ் மற்றும் பத்மநாதன் ஆகியோர் காயம் அடைந் தனர். இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்பு படையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் மின்கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பிடித்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
Next Story






