என் மலர்
செய்திகள்

திருப்பத்தூர் அருகே இடி-மின்னல் தாக்கி மாணவன் பலி
திருப்பத்தூர் அருகே இடி-மின்னல் தாக்கி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள தென்கரை கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பாலமுருகன் (வயது10). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். விடுமுறை தினம் என்பதால் நேற்று மாலை பாலமுருகன் தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது பயங்கர சத்தத்துடன் இடி-மின்னல் தாக்கியதில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தான்.
இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாலமுருகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
Next Story






