என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கை அருகே மாணவரை தாக்கிய 2 பேர் கைது
    X

    சிவகங்கை அருகே மாணவரை தாக்கிய 2 பேர் கைது

    பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை தாலுகா இடையமேலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருபவர் யுவராஜ் (வயது15). இவர் நேற்று மாலை அங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு தன் நண்பர்களுடன் சென்றார். அப்போது பள்ளியை பற்றி விமர்சித்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (27), ஆறுமுகம் (50) அங்கு வந்தனர். அப்போது மாணவர் யுவராஜூக்கும், முருகன், ஆறுமுகம் ஆகியோருக்கும் இடையே வாய்த்தகாறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த முருகனும், ஆறுமுகமும் இரும்பு கம்பி, கட்டையால் யுவராஜை தாக்கினர். படுகாயம் அடைந்த அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து முருகன், ஆறுமுகம் ஆகிய 2 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×