என் மலர்tooltip icon

    செய்திகள்

    மானாமதுரை அருகே குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்த கணவன், மனைவி பலி
    X

    மானாமதுரை அருகே குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்த கணவன், மனைவி பலி

    மானாமதுரை அருகே குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்த கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மானாமதுரை

    மானாமதுரை அருகே உள்ள சின்னக்கண்ணூர் கிராமத்தை சேர்ந்தவர் சோனைமுத்து (வயது 80). இவருடைய மனைவி ராக்கம்மாள் (70). கடந்த 10–ந்தேதி கணவன்–மனைவி இருவரும் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்தனர். வீட்டினுள் மயங்கிக் கிடந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மானாமதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராக்கம்மாள் இறந்து போனார். சோனைமுத்து மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் சோனைமுத்துவும் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×