என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வங்கி அலுவலர் உள்பட 2 பேர் காயம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டுராஜ் (43) என்பவர் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தில் தங்கியுள்ளார்.
இவர் நேற்று இரவு வங்கி பணிகளை முடித்துக் கொண்டு ஆயக்காரன்புலம் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். கருப்பம்புலம் மேலக்காடு அருகே சென்ற போது எதிரே கருப்பம்புலம் கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் ராஜீவ்காந்தி ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பட்டுராஜ் பலத்த காயமடைந்தார்.
அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ராஜீவ்காந்தி (35) என்பவரும் காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.






