என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னிமலை அருகே ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் 5 பவுன் நகை பறிப்பு
    X

    சென்னிமலை அருகே ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் 5 பவுன் நகை பறிப்பு

    சென்னிமலை அருகே ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் 5 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் பறித்து சென்றனர்.
    ஈரோடு:

    காங்கயம் பகுதியை சேர்ந்தவர் நாக மாணிக்கம். இவரது மனைவி தமிழரசி (வயது 33). இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார்.

    இவர் தினமும் தனது வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் பள்ளிக்கூடத்துக்கு வந்து செல்வார்.

    வழக்கம் போல இவர் நேற்று காலை ஸ்கூட்டரில் பள்ளிக்கூடத்துக்கு வேலைக்கு வந்தார். பிறகு மாலையில் வேலைமுடிந்து தனது வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

    சென்னிமலை அருகே உள்ள பூச்சிக்காட்டு வலசு என்ற இடத்தில் தமிழரசி சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரது ஸ்கூட்டரின் பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து கொண்டு இருந்தது.

    ஆள் அதிகம் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் அவர் செல்லும் போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீர் என்று வேகமாக வந்து ஆசிரியை தமிழரசியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதனால் தமிழரசி அதிர்ச் சியடைந்தார். பிறகு இது பற்றி சென்னிமலைபோலீசில் அவர் புகார் செய்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசியிடம் தங்க செயினை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிய 2 மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×