என் மலர்
செய்திகள்

நெய்வேலியில் இருந்து கர்நாடகாவுக்கு மின்வினியோகம் செய்வதை தடுப்போம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு
தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை திறந்து விடாவிட்டால் நெய்வேலியில் இருந்து கர்நாடகாவுக்கு மின்வினியோகம் செய்வதை தடுப்போம் என்று விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.
நெய்வேலி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரியும் காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகாவுக்கு நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் இருந்து மின் வினியோகம் செய்வதை நிறுத்தகோரியும், என்.எல்.சி.தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
விவசாய சங்கம் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தின் போது பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது:-
தமிழக மக்களின் அடிப்படையான தொழில் விவசாயம்.
விவசாயத்துக்கு தேவையான காவிரி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
ஆனால் பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு அரசியல் லாபத்துக்காக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது.
அரசியல் லாபத்துக்காக இவ்வாறு செயல்படும் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து டெல்டா மாவட்ட விவசாயிகளும் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரையும் அழைத்து ரெயில் மறியல் மற்றும் சாலைமறியல் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தி எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினோம்.
நெய்வேலி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினோம்.
நெய்வேலியில் இந்த போராட்டத்தை நடத்துவதற்கு காரணம் என்.எல்.சியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கர்நாடகாவுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்துக்கு தேவைப்படும் அத்தியாவசியமான காவிரி தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகாவுக்கு நெய்வேலியில் இருந்து மின்சாரம் வழங்கக்கூடாது. இதை மீறி இனியும் மின்சாரம் வழங்கப்பட்டால் ஒட்டுமொத்த விவசாயிகளின் உணர்வுகளை மதிக்க தவறிய மத்திய அரசை கண்டித்து என்.எல்.சி.சுரங்க அலுவலகங்களை முற்றுகையிட்டு பூட்டுபோடும் போராட்டம் நடத்துவோம்.
நெய்வேலியில் இருந்து கர்நாடகாவுக்கு 600 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் 1 யூனிட் மின்சாரம் கூட அவர்களுக்கு வழங்கக்கூடாது. கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்குவதை தடுத்து நிறுத்துவோம்.
காவிரி நீர் பிரச்சனை சம்பந்தமாக தமிழக எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்து பேசமுடியவில்லை. அவர்கள் அனைவரும் உடனடியாக தங்கள் பதவியை ராஜனாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரியும் காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகாவுக்கு நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் இருந்து மின் வினியோகம் செய்வதை நிறுத்தகோரியும், என்.எல்.சி.தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
விவசாய சங்கம் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தின் போது பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது:-
தமிழக மக்களின் அடிப்படையான தொழில் விவசாயம்.
விவசாயத்துக்கு தேவையான காவிரி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
ஆனால் பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு அரசியல் லாபத்துக்காக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது.
அரசியல் லாபத்துக்காக இவ்வாறு செயல்படும் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து டெல்டா மாவட்ட விவசாயிகளும் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரையும் அழைத்து ரெயில் மறியல் மற்றும் சாலைமறியல் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தி எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினோம்.
நெய்வேலி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினோம்.
நெய்வேலியில் இந்த போராட்டத்தை நடத்துவதற்கு காரணம் என்.எல்.சியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கர்நாடகாவுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்துக்கு தேவைப்படும் அத்தியாவசியமான காவிரி தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகாவுக்கு நெய்வேலியில் இருந்து மின்சாரம் வழங்கக்கூடாது. இதை மீறி இனியும் மின்சாரம் வழங்கப்பட்டால் ஒட்டுமொத்த விவசாயிகளின் உணர்வுகளை மதிக்க தவறிய மத்திய அரசை கண்டித்து என்.எல்.சி.சுரங்க அலுவலகங்களை முற்றுகையிட்டு பூட்டுபோடும் போராட்டம் நடத்துவோம்.
நெய்வேலியில் இருந்து கர்நாடகாவுக்கு 600 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் 1 யூனிட் மின்சாரம் கூட அவர்களுக்கு வழங்கக்கூடாது. கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்குவதை தடுத்து நிறுத்துவோம்.
காவிரி நீர் பிரச்சனை சம்பந்தமாக தமிழக எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்து பேசமுடியவில்லை. அவர்கள் அனைவரும் உடனடியாக தங்கள் பதவியை ராஜனாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






