என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேரூர் அருகே மகனுக்கு பெண் கிடைக்காத விரக்தியில் தாய் சாணிப்பவுடர் குடித்து தற்கொலை
Byமாலை மலர்18 Oct 2016 11:41 AM GMT (Updated: 18 Oct 2016 11:41 AM GMT)
பேரூர் அருகே மகனுக்கு பெண் கிடைக்காத விரக்தியில் தாய் சாணிப்பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை:
கோவை பேரூர் அருகே உள்ள பச்சாபாளையம் காந்தி காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி மாராள் (வயது 55). கூலித் தொழிலாளி. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். 1 மகன், 1 மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.
மாராள் தனது கடைசி மகனான பாலசுப்பிரமணியம் (25) என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். அதன்படி பலஇடங்களில் பெண் பார்த்துள்ளார். ஆனால் எந்த பெண்ணும் பாலசுப்பிரமணியத்துக்கு அமையவில்லை.
இதனால் மாராள் மனவேதனை அடைந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் மகனுக்கு பெண் கிடைக்காத விரக்தியில் சாணிப்பவுடரை கரைத்து குடித்தார்.
பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மாராளை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மாராள் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை பேரூர் அருகே உள்ள பச்சாபாளையம் காந்தி காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி மாராள் (வயது 55). கூலித் தொழிலாளி. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். 1 மகன், 1 மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.
மாராள் தனது கடைசி மகனான பாலசுப்பிரமணியம் (25) என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். அதன்படி பலஇடங்களில் பெண் பார்த்துள்ளார். ஆனால் எந்த பெண்ணும் பாலசுப்பிரமணியத்துக்கு அமையவில்லை.
இதனால் மாராள் மனவேதனை அடைந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் மகனுக்கு பெண் கிடைக்காத விரக்தியில் சாணிப்பவுடரை கரைத்து குடித்தார்.
பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மாராளை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மாராள் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X