search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து விவசாயி பலி
    X

    வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து விவசாயி பலி

    வேதாரண்யம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்த விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த ஆதனூர் கிராமத்தைச் சேரந்தவர் முனியப்பன் (வயது34). இவரது மனைவி தேவி (27). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 மாதம் ஆகிறது. முனியப்பன் உடல்நலமின்றி கஷ்டப்பட்டு வந்தார். கடந்த 9-ந்தேதி உடல் நலம் மோசமானதால் வீட்டில் இருந்த வயலுக்கு பயன்படுத்தும் வி‌ஷமருந்தை எடுத்து குடித்துவிட்டார்.

    ஆபத்தான நிலையில் இருந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி முனியப்பன் இறந்து விட்டார்.

    இது குறித்து தேவி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் ஆகியோர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×