search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் ஜெயிலில் கைதி தற்கொலை முயற்சி: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    X

    கடலூர் ஜெயிலில் கைதி தற்கொலை முயற்சி: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    கடலூர் ஜெயிலில் கைதி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    நெய்வேலி மந்தாரக்குப்பத்தை சேர்ந்தவர் தேவா(வயது 28). திருட்டு வழக்கில் கைதான இவர் கடலூர் மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    நேற்று இரவு தேவா சிறையில் உள்ள தனது அறையில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்தனர். அப்போது தேவா, ஆணிகளை விழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தேவாவை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கடலூர் ஜெயிலில் கைதிகள் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று கைதி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×