search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 1000 பேர் கைது
    X

    சிவகங்கையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 1000 பேர் கைது

    ரெயில் மறியலில் ஈடுபட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் விவசாய சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

    சிவகங்கை:

    காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க கோரி தமிழகம் முழுவதும் இன்றும் (17-ந்தேதி) நாளையும் (18-ந்தேதி) ரெயில் மறியல் போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

    சிவகங்கையில் போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் யூனியன் அலுவலகம் முன்பிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். தி.மு.க. மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ., போராட்டத்தை வாழ்த்தி பேசி வழியனுப்பினார்.

    ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் ரெயில் நிலையம் வந்ததும், அங்கு நின்ற ராமேசுவரம்-திருச்சி ரெயிலை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்டு), தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன், சிவகங்கை நகர் தி.மு.க. செயலாளர் துரை ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன், முத்துராமலிங்கம், மேப்பல் சக்தி, கடம்பசாமி, மார்க் சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கந்தசாமி, நகர செயலாளர் மதி, காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ராஜரத்தினம், கவுன்சிலர் சண்முகராஜன், ம.தி.மு.க. மாநில தணிக்கை குழு உறுப்பினர் கார்கண்ணன், நகர செயலாளர் சுந்தர பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் திருமொழி, விவசாய சங்க நிர்வாகிகள் முத்துராமலிங்கம், விசுவ நாதன் உள்பட 1000 பேர் பங்கேற்று கைதானார்கள்.

    போராட்டத்தை முன்னிட்டு சிவகங்கை காவல் துணை கண்காணிப்பாளர் மங்களேசுவரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×