என் மலர்
செய்திகள்

கடலூரில் தடையை மீறி ரெயில் மறியல் போராட்டம்: 500 பேர் கைது
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி கடலூரில் தடையை மீறி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் இன்று காலை தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க., த.மா.கா., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் திரண்டனர்.
10.40 மணியளவில் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிப்பதற்காக அவர்கள் அங்கிருந்து ரெயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். பாதி வழியில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ரெயில் மறியல் செய்வதற்கு அனுமதி கிடையாது என்று கூறினர். ஆனால் அதை மீறி அவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வேகமாக ரெயில் நிலையத்தை நோக்கி சென்றனர். ரெயில் நிலையம் அருகே தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டிருந்தன.
அதன்முன் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ரெயில் நிலையத்தை நோக்கி வந்தவர்களிடம் இதைதாண்டி ரெயிலை மறிக்க நீங்கள் சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் எச்சரித்தனர்.
இதனால் போலீசாருக்கும், அவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசாரின் தடையை மீறி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.
போலீசாருக்கும், அவர்களுக்குமிடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்கள் 4 புறமும் சிதறி ஓடினர்.
அப்போது ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கத்தின் சட்டை கிழிந்தது. இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் குளோப் காயமடைந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ.இளபுகழேந்தி, உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பால கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
தி.மு.க. நகர செயலாளர் செந்தில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ரெயில் மறியல் போராட்டத்தையொட்டி சிதம்பரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் இன்று காலை தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க., த.மா.கா., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் திரண்டனர்.
10.40 மணியளவில் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிப்பதற்காக அவர்கள் அங்கிருந்து ரெயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். பாதி வழியில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ரெயில் மறியல் செய்வதற்கு அனுமதி கிடையாது என்று கூறினர். ஆனால் அதை மீறி அவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வேகமாக ரெயில் நிலையத்தை நோக்கி சென்றனர். ரெயில் நிலையம் அருகே தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டிருந்தன.
அதன்முன் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ரெயில் நிலையத்தை நோக்கி வந்தவர்களிடம் இதைதாண்டி ரெயிலை மறிக்க நீங்கள் சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் எச்சரித்தனர்.
இதனால் போலீசாருக்கும், அவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசாரின் தடையை மீறி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.
போலீசாருக்கும், அவர்களுக்குமிடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்கள் 4 புறமும் சிதறி ஓடினர்.
அப்போது ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கத்தின் சட்டை கிழிந்தது. இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் குளோப் காயமடைந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ.இளபுகழேந்தி, உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பால கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
தி.மு.க. நகர செயலாளர் செந்தில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ரெயில் மறியல் போராட்டத்தையொட்டி சிதம்பரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Next Story






