search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்கல் அருகே லாரி மோதி பெண் பலி
    X

    வெங்கல் அருகே லாரி மோதி பெண் பலி

    வெங்கல் அருகே லாரி மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    வெங்கல் அருகே உள்ள கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குணம்மாள். இவர் வாணியஞ்சத்திரம் கிராமத்தில் உள்ள கடை வீதிக்கு வந்தார். சாலையை கடக்க முயன்ற போது தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் இருந்து செங்குன்றம் நோக்கி சிமெண்ட் ஏற்றி சென்ற மினி லாரி குணம்மாள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குணம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து நடந்ததும் மினி லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

    இது குறித்து வெங்கல் இன்ஸ்பெக்டர் வினாயகம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×