என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி-அந்தியூர் பகுதியில் 35 புதுப்பட சி.டி.க்கள் பறிமுதல்: 3 பேர் கைது
    X

    கோபி-அந்தியூர் பகுதியில் 35 புதுப்பட சி.டி.க்கள் பறிமுதல்: 3 பேர் கைது

    கோபி-அந்தியூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 35 புதுப்பட சி.டி.க்களை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    கோபி:

    கோபி சப்-இன்ஸ் பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தனர். பெரியார் திடல் அருகே சந்தேகப் படும்படி ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.

    அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கோபி வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்த குமார்(33) என்றும் அவர் புதுப்பட சி.டி.க்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து தில்லுக்கு துட்டு, நம்பியார் உள்பட 11 புதுப்பட சி.டி.கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இதே போன்று அந்தியூர் சத்தி மெயின் ரோடு, மார்க்கெட் அருகில் அந்தியூர், சின்னதம்பி பாளையம் பகுதியை சேர்ந்த பொம்மநாயக்கர்(55) என்பவர் புதுப்பட சி.டி.க்களை விற்றதாக அந்தியூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    அவரிடம் இருந்து குற்றம் தண்டனை, உச்சத்தில்சிவா உள்பட 13 புதுப்பட சி.டி.கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பொம்மநாயக்கரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    பங்களாபுதூர், டி.ஜி.புதூர் நால்ரோடு பகுதியில் அந்தியூர்,தவிட்டு பாளையம், அம்பேத்கார் வீதியை சேர்ந்த சக்திவேல் (55) புதுப்பட சி.டி.க்களை விற்றதாக பங்களாபுத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 11 சி.டி.கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×