search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாளவாடி அருகே நோய்க்கொடுமையால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
    X

    தாளவாடி அருகே நோய்க்கொடுமையால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

    தாளவாடி அருகே நோய்க்கொடுமையால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    தாளவாடி அருகே உள்ள சேசன் நகர் என்ற இடத்தை சேர்ந்தவர் அம்பீஸ்வரன். தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (வயது 37). இவர்களுக்கு ஒரு மகனும் ஒருமகளும் உள்ளனர்.

    மல்லிகா நோய்க்கொடு மையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த நிலையில் அவர் காணப்பட்டார்.

    இந்த நிலையில் தனது வீட்டில் தனியாக இருந்த மல்லிகா மண் எண்ணையை எடுத்த தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. வேதனை தாங்க முடியாமல் மல்லிகா காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறினார்.

    இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மல்லிகாவின் மீது பிடித்து எரிந்த தீயை அணைத்தனர்.

    இதன் பிறகு கவலைக்கிடமாக இருந்த அவரை சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக மைசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் மல்லிகா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×