என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
விருத்தாசலம் அருகே மினி லாரி-வேன் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் படுகாயம்
விருத்தாசலம்:
கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 54), அதே பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் (60). இவர்களுடைய குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் ஒரு வேனில் நெய்வேலியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இந்த வேனை மேட்டுப் பாளையத்தைச் சேர்ந்த மாணிக்கம் (47) என்பவர் ஓட்டி சென்றார். விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் நேற்று இரவு 11 மணிக்கு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த மினி லாரி திடீரென்று வேன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் வேனின் முகப்பு பகுதியும், மினி லாரியும் சேதம் அடைந்தன. வேனில் பயணம் செய்த ஜேக்கப் மட்டும் காயமடைந்தார். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
மினி லாரியை ஓட்டி வந்த டிரைவரும், அவருடன் வந்த மற்றொருவரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த விருத்தா சலம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த 3 பேரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்