search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலம் அருகே மினி லாரி-வேன் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் படுகாயம்
    X

    விருத்தாசலம் அருகே மினி லாரி-வேன் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் படுகாயம்

    விருத்தாசலம் அருகே மினி லாரி திடீரென வேன் மீது நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விருத்தாசலம்:

    கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 54), அதே பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் (60). இவர்களுடைய குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் ஒரு வேனில் நெய்வேலியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    இந்த வேனை மேட்டுப் பாளையத்தைச் சேர்ந்த மாணிக்கம் (47) என்பவர் ஓட்டி சென்றார். விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் நேற்று இரவு 11 மணிக்கு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த மினி லாரி திடீரென்று வேன் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் வேனின் முகப்பு பகுதியும், மினி லாரியும் சேதம் அடைந்தன. வேனில் பயணம் செய்த ஜேக்கப் மட்டும் காயமடைந்தார். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

    மினி லாரியை ஓட்டி வந்த டிரைவரும், அவருடன் வந்த மற்றொருவரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த விருத்தா சலம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த 3 பேரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×