என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டையில் கைவினைப்பொருட்கள் சிறப்புக் கண்காட்சி: கலெக்டர் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை லேணா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழகம், பூம்புகார் விற்பனை நிலையம், திருச்சி சார்பில் சிறப்பு கைவினைப்பொருட்கள், கைத்தறி துணி வகைகள், நகை வகைகள் மற்றும் கைத்திறன் அகலன்கள் இடம் பெற்ற அகில இந்திய கைவினைப்பொருட்கள் சிறப்பு கண்காட்சி தொடங்கியது.
கண்காட்சியை கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்து கூறியதாவது;
இக்கண்காட்சியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் தனிச் சிறப்புமிக்க கைவினைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தேசிய விருது, மாநில விருது பெற்ற கைவினைஞர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் இச்சிறப்புக் கண்காட்சியில் பங்கு பெற்றுள்ளனர். தங்கள் தனிச்சிறப்புமிக்க கைத்திறன் பொருட்களை நேரடியாக விற்பனை செய்கின்றனர். இங்கு கிடைக்கும் கைவினைப்பொருட்கள், பஞ்சலோக சிலைகள், பித்தளை விளக்குகள், தஞ்சாவூர் கலைத்தட்டுகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள், காகிதக் கூழ் பொம்மைகள், சுட்டமண் பொம்மைகள், மூங்கில் பொருட்கள், வாழை நார் பொருட்கள், சணல் பொருட்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய நகை வகைகள், அரக்கு வளையல்கள் மற்றும் அனைத்து மாநில கைத்திற சேலை வகைகள், மதுரை சுங்கடி, ஹைதராபாத், ஆந்திரா மாநில சேலை வகைகள், சுடிதார், டாப்ஸ் ஆகியன அனைத்து மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சி 14.10.2016 முதல் 20.10.2010 காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை ஞாயிறு உள்பட நடைபெறும். இக்கண்காட்சியில் அனைத்து பொருட்களுக்கும் 10ச தவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து வகையான கடன் அட்டைகளும் எவ்வித சேவைகட்டணமின்றி ஏற்றுக்கொள்ளப்படும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.






