என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.18.57 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: கலெக்டர் ஆய்வு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஊரகவளர்ச்சி மற்றும் ஊரா ட்சித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், கீராத்தூர் ஊராட்சி, கீராத்தூரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.15.25 இலட்சம் மதிப்பீட்டில் நெல்லி, புளி, கருவை, நாவல், பலா, இலந்தை என 1 இலட்சம் எண்ணிக்கையில் நடவு செய்யப்பட்டு வரும் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணியையும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மண்புழு இயற்கை உரம் தயாரிக்கும் கொட்டகை பணியையும், புதுவிடுதி ஊராட்சி, ஏ.டி.காலனியில் தனிநபர் இல்லக்கழிவறை கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.12000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிவறை கட்டுமான பணியையும், வாண்டான் விடுதி ஊராட்சி, வாண்டான் விடுதியில் இந்திரா நினைவு குடியிருப்பு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணியையும் என மொத்தம் ரூ.18.57 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் போது வீட்டின் தரைத்தளம், மேல்தளம், கைப்பிடிச்சுவர், படிக்கட்டுகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை விரைவாக மேற்கொள்ளவும், நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை குளங்கள், கண்மாய்கள், சாலையோரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நட்டு வளர்த்து தினமும் உரிய முறையில் நீர் ஊற்றி பராமரிக்கவும், மண்புழு இயற்கை உரம் தயாரிக்கும் கொட்டகையில் மண்புழுக்களை கொண்டு மண்புழு இயற்கை உரத்தினை விரைவாக தயாரித்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கவும், தனிநபர் இல்லக்கழிவறைகளை தினமும் உரிய முறையில் பயன்படுத்தி பொது சுகாதாரம் காக்கவும், மேலும் முடிவுற்ற பணிகளை உரிய முறையில் பராமரிக்கவும், நடைபெறும் பணிகளை தரமான கட்டுமானப்பொருட்களை கொண்டு விரைவாக கட்டிமுடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.






