search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
    X

    ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

    ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    விருத்தாசலம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அய்யூரைச் சேர்ந்தவர் கந்தசாமி மனைவி அம்சாயாள்(67). இவரும் இவரது மகள் கஸ்தூரியும் விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிரியில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரை பார்க் சென்றனர்.

    பின்னர் துறையூரில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் அரசு பஸ்சில் ஏறினர். பஸ் பாலக்கரையில் இருந்து கடைவீதி வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது அம்சாயாள் அணிந்திருந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் பறித்துச்சென்றனர்.

    இதுகுறித்து அம்சாயாள் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Next Story
    ×