என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருச்சி வரகனேரி பகுதியில் காய்கறி கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது
திருச்சி:
திருச்சி வரகனேரி தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மகன் விக்னேஷ் (வயது 19) அதே பகுதியில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஜாகீர்உசேன் (21), ஜாகீர் உசேன் (19), முகமது உசேன் ஆகியோர் காய்கறி வாங்க விக்னேஷின் கடைக்கு வந்துள்ளனர்.
அங்கு விக்னேஷிடம் 3 பேரும் தகராறு செய்தனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விக்னேஷ் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷை கத்தியை காட்டி மிரட்டிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காய்கறி கடை உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்