என் மலர்
செய்திகள்

கொடுமுடி-சாலைபுதூரில் நாளை மின் நிறுத்தம்
கொடுமுடி மற்றும் சாலைபுதூரில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கொடுமுடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்சாரம் இருக்காது.
கொடுமுடி, சாலைபுதூர், குப்பம்பாளையம், ராசாம் பாளையம், ஒத்தக்கடை, ஊஞ்சலூர், பிலிக்கல்பாளையம், தாமரைபாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், வடபுதுப் பாளையம்.
இந்த தகவலை ஈரோடு தெற்கு செயற்பொறியாளர் சின்னசாமி தெரிவித்தார்.
Next Story