என் மலர்
செய்திகள்

சென்னை கோயம்பேட்டில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு 110 தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சிவகங்கை:
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேட்டில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு செல்ல 3 நாட்களுக்கு 110 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து சிவகங்கை மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தீபாவளி திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் எளிதாக பயணம் செய்ய ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., காரைக்குடி மண்டலத்தின் வாயிலாக 26, 27 மற்றும் 28.10.2016 ஆகிய நாட்களில் 24 மணி நேரமும் சென்னை கோயம்பேட்டிலிருந்து சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு 110 பேருந்துகள் இயக்குகிறது.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவயல், பூவிருந்தவல்லி, நசரத் பேட்டை, வெளிச்சுற்று சாலை வழியாக வண்டலூர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனால் முன்பதிவின் போது தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களிலிருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் குறிப்பாக முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்றடைந்து அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்திற்கு, பேருந்துகளில் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






