என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்துறை அருகே டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி
    X

    செந்துறை அருகே டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி

    செந்துறை அருகே டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செந்துறை:

    செந்துறை அருகே உள்ள பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சுகதேவ் (வயது 19) இவர் பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த துரைகன்னு மகன் அன்பழகனுக்கு சொந்தமான டிராக்டரில் டிரைவராக வேலை பார்த்துவந்தார்

    இந்த நிலையில் சம்பவத்தன்று சுகதேவ் டிராக்டரை ஓட்டி வந்துள்ளார். அப்போது அவர் செந்துறை அருகே எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வந்தபோது எதிர்பாரத விதமாக டிராக்டர் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பலத்த காயமடைந்த சுகதேவை அக்கம்பக்கத்தினர் மீட்டு செந்துறை அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த குவாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ், சுகதேவ்வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    Next Story
    ×