என் மலர்
செய்திகள்

திருப்புவனம் அருகே பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை
திருப்புவனம் அருகே வயல்சேரி பகுதியில் பன்றிகள் அட்டகாசம் செய்வதால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வேர்க் கடலை, பருத்தி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருப்புவனம்:
திருப்புவனம் அருகே வயல்சேரி பகுதியில் பன்றிகள் அட்டகாசம் செய்வதால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வேர்க் கடலை, பருத்தி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருப்புவனம் பஞ்சாயத்து யூனியனைச் சேர்ந்தது வயல்சேரி சிவனாங்குளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் சிரமப்பட்டு பயிர்செய்துள்ள வேர்க்கடலை, பருத்திச் செடிகளை பன்றிகள் கும்பல், கும்பலாக வந்து செடிகளை வேறோடு பிடுங்கி நாசம் செய்து வருகிறது.
இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். பன்றிகளை விரட்ட வேண்டும் என வயல்சேரியைச் சேர்ந்த விவசாயி ராசுத்தேவர் தெரிவித்துள்ளார்.
Next Story






