என் மலர்
செய்திகள்

தரங்கம்பாடி அருகே வேன் மோதி புதுமாப்பிள்ளை பலி
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே உள்ள கண்டியூர் பெரிய தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 30) விவசாய கூலி வேலை பார்த்துவந்தார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவரது மனைவி மரியா.
இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் வெளியூர் சென்று வேலை பார்த்துவிட்டு இரவு வீட்டிற்கு வருவது வழக்கம். நேற்று காலை மோட்டார் சைக்கிளில் குத்தாலத்திற்கு கூலி வேலைக்கு சென்றார்.
பின்னர் இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். கண்டியூர் அருகே வந்த போது திருமணஞ்சேரியிலிருந்து குத்தாலம் நோக்கி சென்ற மினி வேன் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குத்தாலம் போலீசார் சத்தியமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி வேன் டிரைவர் திருமணஞ்சேரி காலிவாய்க்காலை சேர்ந்த விஜயபாலனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 மாதங்களே ஆன புது மாப்பிள்ளை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.






