என் மலர்
செய்திகள்

ஆண்டிமடம் அருகே லாரி மீது கார் மோதி ஒருவர் பலி - 3 பேர் படுகாயம்
ஆண்டிமடம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் அவரது மனைவி, மகன் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆண்டிமடம்:
பெங்களூருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 44). இவரது மனைவி புவனேஸ்வரி (42). இவர்களது மகன் அரவிந்த் (10). இந்த நிலையில், பாலாஜி தனது மனைவி, மகனுடன் கும்பகோணத்தில் உள்ள தனது தாயை பார்ப்பதற்காக பெங்களூருவில் இருந்து வாடகை காரில் புறப்பட்டு வந்தார். காரை பெங்களூருவை சேர்ந்த பிரவின் ஓட்டினார்.
நேற்று முன்தினம் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த கருங்கை பஸ்நிறுத்தம் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, காரைக்காலில் இருந்து சிமெண்டு மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு அந்த வழியாக வந்த லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில், காரில் இருந்த பாலாஜி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது மனைவி புவனேஸ்வரி, மகன் அரவிந்த், டிரைவர் பிரவின் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து லாரி டிரைவர் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 44). இவரது மனைவி புவனேஸ்வரி (42). இவர்களது மகன் அரவிந்த் (10). இந்த நிலையில், பாலாஜி தனது மனைவி, மகனுடன் கும்பகோணத்தில் உள்ள தனது தாயை பார்ப்பதற்காக பெங்களூருவில் இருந்து வாடகை காரில் புறப்பட்டு வந்தார். காரை பெங்களூருவை சேர்ந்த பிரவின் ஓட்டினார்.
நேற்று முன்தினம் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த கருங்கை பஸ்நிறுத்தம் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, காரைக்காலில் இருந்து சிமெண்டு மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு அந்த வழியாக வந்த லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில், காரில் இருந்த பாலாஜி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது மனைவி புவனேஸ்வரி, மகன் அரவிந்த், டிரைவர் பிரவின் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து லாரி டிரைவர் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






