என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை அருகே மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை: போலீஸ் விசாரணை
    X

    நாகை அருகே மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை: போலீஸ் விசாரணை

    நாகை அருகே மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையம், வண்டிப்பேட்டை ஏழை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் அன்பரசன் (வயது 30). இவருக்கும் புதுச்சேரியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அன்பரசனை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மனமுடைந்த அன்பரசன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×