என் மலர்
செய்திகள்

தூத்தூர் அருகே குடிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் விவசாயி தற்கொலை
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் தூத்தூர் அருகேயுள்ள கே.மாத்தூர் கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல் ( வயது 48). விவசாயி. இவர் கடந்த 2-ம் தேதி மதியம் தனது மனைவி மாலாவிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளதாக தெரிகிறது. அதற்கு மாலா மறுத்துள்ளார்.
இதனால் பழனிவேல் கோபித்துக் கொண்டு வீட்டின் பின்புறம் பருத்தி செடிக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். இதனால் அவர் வீட்டிற்கு மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவையாறு அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக பழனிவேல் இறந்தார். இது குறித்து அவரது மகன் ஐயப்பன் தூத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






