என் மலர்
செய்திகள்

திருப்பத்தூர் அருகே கொத்தனார் வீட்டில் 15½ பவுன்-பணம் கொள்ளை
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா தண்டவராயன்பட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட எஸ்.மேலங்குடி ஜீவாநகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது36), கொத்தனார். இவரது மனைவி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று கணவன்- மனைவி வீட்டை பூட்டி சாவியை கதவு அருகில் வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டனர். இதை நோட்ட மிட்ட மர்ம ஆசாமி, சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே புகுந்தான்.
பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த 15½ பவுன் நகை, ரூ. 5 ஆயிரம் ரொக்கம், 3 ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை திருடிச் சென்றான்.
வீடு திரும்பிய பழனிச் சாமி, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை, பணம் கொள்ளை போயிருந்தது.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் தண்டவராயன்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.






