என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலேசிய தொழிலதிபரின் மனைவியை அபகரித்த புதுக்கோட்டை கார் டிரைவர் கைது
    X

    மலேசிய தொழிலதிபரின் மனைவியை அபகரித்த புதுக்கோட்டை கார் டிரைவர் கைது

    புதுக்கோட்டை அருகே மலேசிய தொழிலதிபரின் மனைவியை அபகரிக்க முயன்ற கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    மலேசியா நாட்டின் ஹல்லாதம்மான் பகுதியை சேர்ந்தவர் லிங்கம்மாரி (வயது 39), தொழிலதிபர். இவரது மனைவி ஸ்ரீதேவி (35). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    லிங்கம் மாரி கடந்த 6.9.2015 அன்று குடும்பத்தினருடன் சுற்றுலாவாக தமிழகம் வந்தார். அப்போது சென்னையில் இருந்து வாடகை காரை புக் செய்து கேரளா, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றார்.

    கார் டிரைவராக இருந்த புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டை சேர்ந்த உமர் கர்த்தாப் (34) என்பவருக்கும், ஸ்ரீதேவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. உமர் கர்த்தாப்புக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருப்பினும் அவர் ஸ்ரீதேவியுடன் பழகி வந்தார். செல்போன் மற்றும் வாட்ஸ் அப் எண்களை பரிமாறி கொண்டதோடு, கேரளாவில் இருவரும் தனியாக நெருக்கமாக புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

    இந்த நிலையில் சுற்றுலா முடிந்து லிங்கம்மாரி குடும்பத்தினருடன் மலேசியா சென்றார். அங்கிருந்து ஸ்ரீதேவி அடிக்கடி உமர் கர்த்தாப்பை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதையறிந்த உமர் கர்த்தாப்பின் மனைவி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர்.

    இதனிடையே சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்களை லிங்கம்மாரி பார்த்தபோது அதில் தனது மனைவியுடன் கார் டிரைவர் நெருக்கமாக நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது பற்றி மனைவியிடம் கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து ஸ்ரீ தேவி உமர்கர்த்தாப்பிற்கு போன் செய்து கண்ணீருடன் நடந்தவற்றை கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து உடனே தமிழகத்திற்கு வருமாறு உமர்கர்த்தாப் கூறவே, ஸ்ரீ தேவி தனது கணவர் மற்றும் குழந்தைகளை உதறி விட்டு தமிழகம் வந்தார். அவரை புதுக்கோட்டையில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் உமர் கர்த்தாப் தங்க வைத்தார்.

    இதனிடையே தனது நண்பர்கள் உதவியுடன் மனைவியை தேடி புதுக்கோட்டை வடகாட்டுக்கு லிங்கம்மாரி வந்தார். உமர்கர்த்தாப்பை சந்தித்து தட்டிக்கேட்ட போது, நான் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். எங்களை பிரிக்க நினைத்தால் கொலை செய்துவிடுவேன் என்று லிங்கம் மாரிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது குறித்து ஆலங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமர்கர்த்தாப்பை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×