என் மலர்
செய்திகள்

சிவகங்கையில் போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவர் தீக்குளிக்க முயற்சி
சிவகங்கையில் போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவர் தீககுளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை:
சிவகங்கை அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டிரைவராக வேலை பார்ப்பவர் ரவி (வயது 41). இவர், கடந்த 2-ந்தேதி நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்றாராம்.
அதன் பிறகு நேற்று பணிக்கு செல்வதற்காக போக்குவரத்துக்கழக பணிமனைக்கு சென்றார். அப்போது போதுமான டிரைவர்கள் பணியில் இருப்பதால் இன்று பணி இல்லை என கிளை மேலாளர் கூறினாராம். மேலும் அன்றைய தினம் ரவிக்கு ‘ஆப்செண்ட்’ போட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி, பணிமனையில் இருந்த டீசலை எடுத்து தனது உடலில் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த சக ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, அவரை காப்பாற்றினர்.
இதுதொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டிரைவராக வேலை பார்ப்பவர் ரவி (வயது 41). இவர், கடந்த 2-ந்தேதி நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்றாராம்.
அதன் பிறகு நேற்று பணிக்கு செல்வதற்காக போக்குவரத்துக்கழக பணிமனைக்கு சென்றார். அப்போது போதுமான டிரைவர்கள் பணியில் இருப்பதால் இன்று பணி இல்லை என கிளை மேலாளர் கூறினாராம். மேலும் அன்றைய தினம் ரவிக்கு ‘ஆப்செண்ட்’ போட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி, பணிமனையில் இருந்த டீசலை எடுத்து தனது உடலில் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த சக ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, அவரை காப்பாற்றினர்.
இதுதொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






