என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவிரி பிரச்சனையில் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்: பியூஸ் கோயல் பேச்சு
Byமாலை மலர்5 Oct 2016 4:35 AM GMT (Updated: 5 Oct 2016 4:35 AM GMT)
காவிரி பிரச்சனையில் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி:
இந்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான இளைஞர் மற்றும் இளம்பெண்களின் திறனை மேம்படுத்தும் வகையில் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து அமைக்கும் திறன் மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நிலக்கரி மற்றும் மின்சாரத்துறை மந்திரி பியூஸ்கோயல் பேசியதாவது:-
என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சுரங்கப்பணி மின் உற்பத்தியில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 1956-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது தமிழகத்துக்கு மட்டுமின்றி, நாடு முழுவதும் மின்சாரத்தை வழங்கி தனது வணிகத்தைப் பெருக்கி வருகிறது.
இந்த நிறுவனம் 2020-ம் ஆண்டுக்குள் மகாரத்னா அந்தஸ்துபெறும். நஷ்டத்தில் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனங்கள் பிரதமரின் வழிகாட்டுதலின்படி தற்போது லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளன.
இதற்கு என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சிறந்த உதாரணமாகும்.
காவிரி நதிநீர் பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டின் வழி காட்டுதல் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு அடிப்படையில், இரு மாநில மக்களும் பயனடையும் வகையில் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். அதன் மூலம் பிரகாசமான எதிர்காலம் அமையும்.
காவிரி நீர் விவகாரத்தில் மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து மக்கள் பணியாற்றுவார்.
மேற்கண்டவாறு அவர் பேசினார்.
இந்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான இளைஞர் மற்றும் இளம்பெண்களின் திறனை மேம்படுத்தும் வகையில் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து அமைக்கும் திறன் மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நிலக்கரி மற்றும் மின்சாரத்துறை மந்திரி பியூஸ்கோயல் பேசியதாவது:-
என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சுரங்கப்பணி மின் உற்பத்தியில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 1956-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது தமிழகத்துக்கு மட்டுமின்றி, நாடு முழுவதும் மின்சாரத்தை வழங்கி தனது வணிகத்தைப் பெருக்கி வருகிறது.
இந்த நிறுவனம் 2020-ம் ஆண்டுக்குள் மகாரத்னா அந்தஸ்துபெறும். நஷ்டத்தில் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனங்கள் பிரதமரின் வழிகாட்டுதலின்படி தற்போது லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளன.
இதற்கு என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சிறந்த உதாரணமாகும்.
காவிரி நதிநீர் பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டின் வழி காட்டுதல் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு அடிப்படையில், இரு மாநில மக்களும் பயனடையும் வகையில் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். அதன் மூலம் பிரகாசமான எதிர்காலம் அமையும்.
காவிரி நீர் விவகாரத்தில் மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து மக்கள் பணியாற்றுவார்.
மேற்கண்டவாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X