என் மலர்
செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட ராஜலட்சுமி.
நெய்வேலியில் காண்டிராக்டர் மனைவி தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
நெய்வேலியில் தற்கொலை செய்துகொண்ட காண்டிராக்டர் மனைவி ராஜலட்சுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் வடலூர் ஆபத்தாரண புரம் ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 38). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
செல்வகுமாருக்கும், ராஜலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெய்வேலி 20-வது வட்டத்தில் உள்ள அவரது தந்தை சேரபாண்டியன் வீட்டுக்கு ராஜலட்சுமி சென்று விட்டார். அங்கேயே அவர் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் காலை வீட்டின் முன்பு உள்ள மரத்தில் ராஜலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கினார். மரத்தின் அருகே ஒரு கடிதம் கிடந்தது.
இது பற்றி நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அந்த கடிதத்தை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ராஜலட்சுமி எழுதி இருந்தார். அதில் என் கணவர் செல்வகுமாருக்கும், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலைப்பார்க்கும் பெண் போலீஸ் ஒருவருக்கும் பழக்கம் உள்ளது. அவருடன் அவர் வாழ நினைக்கிறார்.
இதனால் எனக்கும், எனது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. என் கணவர், அவரது குடும்பத்தினர் மற்றும் பெண் போலீசால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். என் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தற்கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மாலை ராஜலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடலை பெற்றுக்கொள்ளும்படி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் உடலை வாங்க மறுத்து விட்டார்கள்.
ராஜலட்சுமியின் சாவுக்கு காரணமான பெண் போலீஸ் மற்றும் செல்வகுமார், அவரது உறவினர்கள் ஆகியோரை கைது செய்ய வேண்டும். ராஜலட்சுமியின் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுநடத்தினர். ஆனால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பிணத்தை வாங்க மாட்டோம் என்றனர். ராஜலட்சுமியின் உடல் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிலேயே வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூர் ஆபத்தாரண புரம் ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 38). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
செல்வகுமாருக்கும், ராஜலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெய்வேலி 20-வது வட்டத்தில் உள்ள அவரது தந்தை சேரபாண்டியன் வீட்டுக்கு ராஜலட்சுமி சென்று விட்டார். அங்கேயே அவர் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் காலை வீட்டின் முன்பு உள்ள மரத்தில் ராஜலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கினார். மரத்தின் அருகே ஒரு கடிதம் கிடந்தது.
இது பற்றி நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அந்த கடிதத்தை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ராஜலட்சுமி எழுதி இருந்தார். அதில் என் கணவர் செல்வகுமாருக்கும், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலைப்பார்க்கும் பெண் போலீஸ் ஒருவருக்கும் பழக்கம் உள்ளது. அவருடன் அவர் வாழ நினைக்கிறார்.
இதனால் எனக்கும், எனது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. என் கணவர், அவரது குடும்பத்தினர் மற்றும் பெண் போலீசால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். என் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தற்கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மாலை ராஜலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடலை பெற்றுக்கொள்ளும்படி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் உடலை வாங்க மறுத்து விட்டார்கள்.
ராஜலட்சுமியின் சாவுக்கு காரணமான பெண் போலீஸ் மற்றும் செல்வகுமார், அவரது உறவினர்கள் ஆகியோரை கைது செய்ய வேண்டும். ராஜலட்சுமியின் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுநடத்தினர். ஆனால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பிணத்தை வாங்க மாட்டோம் என்றனர். ராஜலட்சுமியின் உடல் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிலேயே வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story






