search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் புகார் குறித்து பொது பார்வையாளரிடம் தெரிவிக்கலாம்: அரியலூர் கலெக்டர் தகவல்
    X

    தேர்தல் புகார் குறித்து பொது பார்வையாளரிடம் தெரிவிக்கலாம்: அரியலூர் கலெக்டர் தகவல்

    தேர்தல் புகார் குறித்து பொது பார்வையாளரிடம் தெரிவிக்கலாம் என அரியலூர் கலெக்டர் கூறியுள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் 2016 ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தல்கள் 17.10.2016 மற்றும் 19.10.2016 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது.

    இதற்காக அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு பொதுத் தேர்தல் பார்வையாளாராக ஆர்.லால்வீணாவை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. பொதுத்தேர்தல் பார்வையாளர் பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா மாளிகை அறை எண்.01-ல் தங்கியுள்ளார். பொதுமக்கள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பொதுப்பார்வையாளரை 9436960360 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் எ.சரவணவேல்ராஜ், தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×