என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நீலாங்கரை அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 கல்லூரி மாணவர்கள் கைது
திருவான்மியூர்:
நீலாங்கரை அடுத்த பாலவாக்கம் பல்கலைநகர் பீச் பகுதியைச் சேர்ந்தவர் தேவி.
இவர் காலை வாக்கிங் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவர் கழுத்தில் இருந்த நகையை பறித்தனர்.
அதிர்ச்சி அடைந்த தேவி நகையை பறித்த வாலிபர் கையை கடித்தார். இதில் நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தனர்.
இதை பார்த்த பொதுமக்கள் 2 வாலிபர்களை பிடிக்க முயன்றனர். உடனே 2 பேரும் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி ஓடினார்கள்.
பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து நீலாங்கரை போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் பனையூர் ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்த யோகஷ்வரன், வெட்டு வாங்கேணி கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பதும் இருவரும் படூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிப்பதும் தெரியவந்தது.
இவர்கள் மோட்டார் சைக்கிள்களை திருடி வழிப் பறியில் ஈடுபட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்