என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தியமங்கலத்தில் இருந்து செல்லும் காய்கறி வேன்களை தடுத்து நிறுத்தும் கர்நாடக போலீசார்
Byமாலை மலர்3 Oct 2016 11:18 AM GMT (Updated: 3 Oct 2016 11:18 AM GMT)
சத்தியமங்கலத்தில் இருந்து செல்லும் காய்கறி வேன்களை தடுத்து நிறுத்தும் கர்நாடக போலீசாரால் தமிழக வியாபாரிகள் தவிக்கிறார்கள்.
சத்தியமங்கலம்:
காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக தமிழகம்-கர்நாடகம் இடையே இன்னும் இயல்பு நிலை சீராகவில்லை.
இரு மாநில பஸ்களும் எல்லை (புளிஞ்சூர்) வரை சென்று அந்தந்த மாநில பயணிகளை இறக்கி விட்டு ஏற்றி கொண்டு வருகிறது.
இதே போல் சரக்கு லாரிகளும் தொடர்ந்து செல்ல முடியாமல் தவித்து வருகிறது. கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு, சத்தியமங்கலத்தில் இருந்து தினமும் கர்நாடகா மாநிலம் மைசூர், கொள்ளேகால், சாம்ராஜ் நகருக்கு காய்கறி வேன்கள் மற்றும் மல்லிகை பூக்கள் ஏற்றி கொண்டு செல்லும்.
ஆனால் கர்நாடகாவில் தொடர்ந்து பதட்டம் காரணமாக இந்த காய்கறி சரக்கு வாகனங்களும் செல்ல முடியாமல் தவித்து வருகிறது.
மாநில எல்லையான புளிஞ்சூர் வரை சென்று அங்கிருந்து கர்நாடகா பதிவெண் கொண்ட சரக்கு வேனில் காய்கறிகளை அனுப்பி வந்தனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக எல்லையில் உள்ள கர்நாடகா போலீசார் சத்தியமங்கலத்தில் இருந்து வரும் காய் கறி வேன்களுக்கு தடை விதிக்கிறார்கள். "காய் கறிகளை கொண்டு வராதீர்கள் திரும்பி போய் விடுங்கள்" என்று மிரட்டும் தொனியில் கூறி வருகிறார்கள். இதனால் என்ன செய்வது என தமிழக வியாபாரிகள் தவிக்கிறார்கள்.
இதையொட்டி தாளவாடி வரை வந்து செல்லும் கர்நாடகா மாநில தனியார் பஸ்களில் காய்கறிகளை வியாபாரிகள் அனுப்பி வருகிறார்கள்.
இதே போல் கர்நாடகா மாநில தனியார் பஸ்களிலும் தாளவாடிக்கு காய்கறிகள் மற்றும் இதர பொருட்கள் கொண்டு வரப்படுகிறது.
தாளவாடியில் இரு மாநிலத்தவர்களும் சம அளவில் வசித்து வருவதால் இதற்கு யாரும் தடை விதிப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக தமிழகம்-கர்நாடகம் இடையே இன்னும் இயல்பு நிலை சீராகவில்லை.
இரு மாநில பஸ்களும் எல்லை (புளிஞ்சூர்) வரை சென்று அந்தந்த மாநில பயணிகளை இறக்கி விட்டு ஏற்றி கொண்டு வருகிறது.
இதே போல் சரக்கு லாரிகளும் தொடர்ந்து செல்ல முடியாமல் தவித்து வருகிறது. கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு, சத்தியமங்கலத்தில் இருந்து தினமும் கர்நாடகா மாநிலம் மைசூர், கொள்ளேகால், சாம்ராஜ் நகருக்கு காய்கறி வேன்கள் மற்றும் மல்லிகை பூக்கள் ஏற்றி கொண்டு செல்லும்.
ஆனால் கர்நாடகாவில் தொடர்ந்து பதட்டம் காரணமாக இந்த காய்கறி சரக்கு வாகனங்களும் செல்ல முடியாமல் தவித்து வருகிறது.
மாநில எல்லையான புளிஞ்சூர் வரை சென்று அங்கிருந்து கர்நாடகா பதிவெண் கொண்ட சரக்கு வேனில் காய்கறிகளை அனுப்பி வந்தனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக எல்லையில் உள்ள கர்நாடகா போலீசார் சத்தியமங்கலத்தில் இருந்து வரும் காய் கறி வேன்களுக்கு தடை விதிக்கிறார்கள். "காய் கறிகளை கொண்டு வராதீர்கள் திரும்பி போய் விடுங்கள்" என்று மிரட்டும் தொனியில் கூறி வருகிறார்கள். இதனால் என்ன செய்வது என தமிழக வியாபாரிகள் தவிக்கிறார்கள்.
இதையொட்டி தாளவாடி வரை வந்து செல்லும் கர்நாடகா மாநில தனியார் பஸ்களில் காய்கறிகளை வியாபாரிகள் அனுப்பி வருகிறார்கள்.
இதே போல் கர்நாடகா மாநில தனியார் பஸ்களிலும் தாளவாடிக்கு காய்கறிகள் மற்றும் இதர பொருட்கள் கொண்டு வரப்படுகிறது.
தாளவாடியில் இரு மாநிலத்தவர்களும் சம அளவில் வசித்து வருவதால் இதற்கு யாரும் தடை விதிப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X