என் மலர்
செய்திகள்

கடலூரில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர் மண்டல அரசு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் மண்டல அரசு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தொ.மு.ச. மண்டல தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தங்க ஆனந்தன், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க துணை தலைவர் பாஸ்கர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள்.
போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், போனஸ், பஞ்சப்படி உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தொ.மு.சா., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
கடலூர் மண்டல அரசு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தொ.மு.ச. மண்டல தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தங்க ஆனந்தன், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க துணை தலைவர் பாஸ்கர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள்.
போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், போனஸ், பஞ்சப்படி உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தொ.மு.சா., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
Next Story






