என் மலர்
செய்திகள்

நாளை காந்தி ஜெயந்தி: டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் - கலெக்டர் ராஜேஷ் உத்தரவு
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று கலெக்டர் ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காந்திஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து அரசு சில்லறை மதுபான கடைகளும், அதனுடன் உள்ள மதுபான பார்களும், மனமகிழ் மன்றம் மற்றும் உரிமம் பெற்ற அனைத்து மதுபான பார்களிலும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது.
ஆகவே டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லறை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள் நாளை எல்லா மதுபான கடைகளும், மது அருந்தும் இடங்களும் திறக்காமல், மதுவிற்பனை இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மீறி எவரேனும் கடைகள் மற்றும் மது அருந்தும் பார்களில் மதுபானங்கள் விற்றாலோ அல்லது திறந்து வைத்தாலோ கடை மேற்பார்வையாளர்கள், உரிமம் தாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காந்திஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து அரசு சில்லறை மதுபான கடைகளும், அதனுடன் உள்ள மதுபான பார்களும், மனமகிழ் மன்றம் மற்றும் உரிமம் பெற்ற அனைத்து மதுபான பார்களிலும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது.
ஆகவே டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லறை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள் நாளை எல்லா மதுபான கடைகளும், மது அருந்தும் இடங்களும் திறக்காமல், மதுவிற்பனை இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மீறி எவரேனும் கடைகள் மற்றும் மது அருந்தும் பார்களில் மதுபானங்கள் விற்றாலோ அல்லது திறந்து வைத்தாலோ கடை மேற்பார்வையாளர்கள், உரிமம் தாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story






