என் மலர்
செய்திகள்

நாகை அருகே தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
நாகை அருகே தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகப்பட்டினம்:
நாகை அருகே உள்ள திருக்குவளை போலீஸ் சரகம் மேலவாழக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிங்காரவேலன். இவரது மகன் சங்கர் (வயது 18). இவர் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த சங்கர் அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு கொண்டார். உடனே அவரை மீட்டு நாகை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்கு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார், ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.
இதுகுறித்து திருக்குவளை இன்ஸ்பெக்டர் விவேகானந்தம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாகை அடுத்த பாகசாலை போலீஸ் சரகம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவி(வயது 52) கூலி தொழிலாளி. இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். சிகிச்சை அளித்தும் வயிற்று வலி குணமாகவில்லையாம். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார். உடனே அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு சிதம்பரம் அண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.
இது குறித்து பாகசாலை இன்ஸபெக்டர் சந்திரசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாகை அருகே உள்ள திருக்குவளை போலீஸ் சரகம் மேலவாழக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிங்காரவேலன். இவரது மகன் சங்கர் (வயது 18). இவர் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த சங்கர் அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு கொண்டார். உடனே அவரை மீட்டு நாகை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்கு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார், ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.
இதுகுறித்து திருக்குவளை இன்ஸ்பெக்டர் விவேகானந்தம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாகை அடுத்த பாகசாலை போலீஸ் சரகம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவி(வயது 52) கூலி தொழிலாளி. இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். சிகிச்சை அளித்தும் வயிற்று வலி குணமாகவில்லையாம். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார். உடனே அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு சிதம்பரம் அண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.
இது குறித்து பாகசாலை இன்ஸபெக்டர் சந்திரசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






