என் மலர்
செய்திகள்

அரியலூர் அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
அரியலூர் அருகே டி.எஸ்.பி. திட்டியதால் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். உடலை சாலையில் போட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் அருகே டி.எஸ்.பி. திட்டியதால் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். உடலை சாலையில் போட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுச்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் . ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மகன் தனபால் (வயது 23). போலீஸ்காரரான இவர் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் டி.எஸ்.பி. இனிகோதிவ்யனுக்கு டிரைவராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த தனபால், வீட்டின் அறைக்கு சென்று தூங்கினார். இன்று காலை அவர் நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அறைக்கு சென்று பார்த்த போது தூக்குப்போட்ட நிலையில் தனபால் பிணமாக தொங்கினார். இதனால் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனிடையே தனபால் தற்கொலைக்கு டி.எஸ்.பி. இனிகோதிவ்யன்தான் காரணம் என்று குற்றம் சாட்டி, சிதம்பரம்- ஜெயங் கொண்டம் நெடுஞ்சாலையில் தனபால் உடலை போட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் உடையார் பாளையம், மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தனபாலின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.
தனபால் தற்கொலைக்கு காரணமான டி.எஸ்.பி.மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எஸ்.பி. சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை செய்து கொண்ட தனபால், அந்த பகுதியை சேர்ந்த சாராய வியாபாரி ஒருவரிடம் மாமூல் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாமூல் பெறுவதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அந்த சாராய வியாபாரி,டி.எஸ்.பி. இனிகோதிவ்யனிடம் கூறவே, அவர் தனபாலை தகாத வார்த்தைகளால் திட்டி கண்டித்தாராம். மேலும் திருச்சி ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த தனபால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் அருகே டி.எஸ்.பி. திட்டியதால் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். உடலை சாலையில் போட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுச்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் . ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மகன் தனபால் (வயது 23). போலீஸ்காரரான இவர் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் டி.எஸ்.பி. இனிகோதிவ்யனுக்கு டிரைவராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த தனபால், வீட்டின் அறைக்கு சென்று தூங்கினார். இன்று காலை அவர் நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அறைக்கு சென்று பார்த்த போது தூக்குப்போட்ட நிலையில் தனபால் பிணமாக தொங்கினார். இதனால் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனிடையே தனபால் தற்கொலைக்கு டி.எஸ்.பி. இனிகோதிவ்யன்தான் காரணம் என்று குற்றம் சாட்டி, சிதம்பரம்- ஜெயங் கொண்டம் நெடுஞ்சாலையில் தனபால் உடலை போட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் உடையார் பாளையம், மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தனபாலின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.
தனபால் தற்கொலைக்கு காரணமான டி.எஸ்.பி.மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எஸ்.பி. சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை செய்து கொண்ட தனபால், அந்த பகுதியை சேர்ந்த சாராய வியாபாரி ஒருவரிடம் மாமூல் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாமூல் பெறுவதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அந்த சாராய வியாபாரி,டி.எஸ்.பி. இனிகோதிவ்யனிடம் கூறவே, அவர் தனபாலை தகாத வார்த்தைகளால் திட்டி கண்டித்தாராம். மேலும் திருச்சி ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த தனபால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






