என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடியரசு
    X
    கொடியரசு

    பெண்ணாடம் அருகே கனமழை: மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உடல் கருகியது

    பெண்ணாடம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உடல் கருகிய நிலையில் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிசிக்சை பெற்று வருகிறார்.
    பெண்ணாடம்:

    காற்று மண்டலத்தில் உருவான மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பெண்ணாடம், விருத்தாசலம், மேல்மலையனூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த சின்னகொசப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் கொடியரசு (வயது 19). இவர் திட்டக்குடியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை கொடியரசு மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்தனர்.

    அப்போது இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வீட்டு வாசலில் இருந்த மின் பெட்டி மீது இடி விழுந்தது. இதில் மின்கம்பிகள் தீப்பிடித்து எரிந்ததால் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த கொடியரசு மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவரது உடல் கருகியது.

    அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கொடியரசை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சின்ன கொசப்பள்ளம் பகுதியில் கனமழை பெய்ததால் அந்த பகுதியில் 5 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. மேலும், அந்தபகுதியில் வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்களும் சேதமடைந்தன.
    Next Story
    ×