என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண் அதிகாரி
    X

    பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண் அதிகாரி

    பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் அதிகாரி மயங்கி விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    பண்ருட்டி:

    பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து வருபவர் மோகனாம்பாள் (வயது 47). இவர் நேற்று மாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு வாங்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அவரிடம் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

    அப்போது திடீரென மோகனாம்பாள் மயங்கி விழுந்தார். உடனே அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் அதிகாரி மயங்கி விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்யும் பணியும் சிறிது நேரம் தடைபட்டது.
    Next Story
    ×