என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே ஜோதிடர் மாயம்
    X

    வேதாரண்யம் அருகே ஜோதிடர் மாயம்

    வேதாரண்யம் அருகே ஜோசியம் பார்ப்பதற்காக வெளியே சென்ற ஜோதிடர் மாயமானார். இது குறித்து அவரது மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா, வாய்மேட்டில் தரங்கம் பாடியை சேர்ந்த காட்டு நாயக்கர் குடும்பத்தினர் கூடாரம் அமைத்து தங்கி தங்கள் பரம்பரை தொழிலான ஜோசியம் பார்த்து வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் அதிகாலை எழுந்து பல்வேறு ஊர்களுக்கு சென்று ஜோசியம் பார்த்துவிட்டு மாலை வீடு திரும்புவார்.

    இந்நிலையில் வாய்மேட்டில் தங்கியிருந்த தரங்கம்பாடியை சேர்ந்த பாக்கியராஜ் மகன் ராஜூ (வயது 27) கடந்த 6ம் தேதி ஜோசியம் பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளார்.

    ஆனால் அவர் இதுவரை கூடாரத்திற்கு வரவில்லை. இதுகுறித்து அவரது மனைவி கஸ்தூரி வாய்மேடு போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் சிவதாஸ் வழக்குபதிவு செய்து ராஜூவை தேடி வருகின்றார்.

    Next Story
    ×