என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே மனைவியை அடித்துக்கொன்ற கணவர்: போலீசார் விசாரணை
ஜெயங்கொண்டம் அருகே மனைவியை கணவன் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிறுகடம்பூரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 29), கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி (25). இவர்களுக்கு திருமணமாகி 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வி, கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே சிறுவட்டத்துறையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த ஆடி மாதம் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, இருவரையும் சேர்த்து வைத்தனர். இருப்பினும் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றிரவும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று காலை செல்வி, வீட்டை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த சக்திவேல் திடீரென செல்வியின் கழுத்தை பிடித்து, கட்டிலில் வைத்து தாக்கினார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து சக்திவேல் தப்பி சென்று விட்டார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் இரும்புலிக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய சக்திவேலை வலைவீசி தேடி வருகின்றனர். அவர் மீது ஏற்கனவே இரும்புலிக்குறிச்சி போலீசில் கொள்ளை வழக்குகள் உள்ளது. இந்நிலையில் அவர் மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் அரியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிறுகடம்பூரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 29), கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி (25). இவர்களுக்கு திருமணமாகி 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வி, கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே சிறுவட்டத்துறையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த ஆடி மாதம் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, இருவரையும் சேர்த்து வைத்தனர். இருப்பினும் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றிரவும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று காலை செல்வி, வீட்டை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த சக்திவேல் திடீரென செல்வியின் கழுத்தை பிடித்து, கட்டிலில் வைத்து தாக்கினார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து சக்திவேல் தப்பி சென்று விட்டார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் இரும்புலிக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய சக்திவேலை வலைவீசி தேடி வருகின்றனர். அவர் மீது ஏற்கனவே இரும்புலிக்குறிச்சி போலீசில் கொள்ளை வழக்குகள் உள்ளது. இந்நிலையில் அவர் மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் அரியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






