search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே குடிநீர் பிடிப்பதில் தகராறு
    X

    வேதாரண்யம் அருகே குடிநீர் பிடிப்பதில் தகராறு

    வேதாரண்யம் அருகே குடிநீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் தென்னம்புலம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (58). இவர் வீட்டருகே உள்ள குடிநீர் பைப்பில் தண்ணீர் பிடிப்பது சம்மந்தமாக ஏற்பட்ட பிரச்சினையில் அதே ஊரே சேர்ந்த ராமச்சந்திரன் மகன் செந்தில் (38) என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில் சேகரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த சேகர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    Next Story
    ×