என் மலர்
செய்திகள்

கண்ணகிநகர் போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது
கண்ணகிநகர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
திருவான்மியூர்:
சென்னை, கண்ணகிநகர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பினர்.
இதில் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த 9 மோட்டார் சைக்கிள்கள் எரிந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் என்ஜினீயரிடம் நகை பறித்த வழக்கு தொடர்பாக சிந்தாதிரிப் பேட்டையை சேர்ந்த கார்த்திக்கை கண்ணகிநகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.அப்போது உடல் நலக்குறைவால் போலீஸ் நிலையத்திலேயே கார்த்திக் இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக கண்ணகி நகரை சேர்ந்த தினேஷ், மோகன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் இதில் தொடர்புடைய அவர்களது நண்பர்கள் 4 பேரை தேடி வருகிறார்கள். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை, கண்ணகிநகர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பினர்.
இதில் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த 9 மோட்டார் சைக்கிள்கள் எரிந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் என்ஜினீயரிடம் நகை பறித்த வழக்கு தொடர்பாக சிந்தாதிரிப் பேட்டையை சேர்ந்த கார்த்திக்கை கண்ணகிநகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.அப்போது உடல் நலக்குறைவால் போலீஸ் நிலையத்திலேயே கார்த்திக் இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக கண்ணகி நகரை சேர்ந்த தினேஷ், மோகன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் இதில் தொடர்புடைய அவர்களது நண்பர்கள் 4 பேரை தேடி வருகிறார்கள். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
Next Story






