என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலாஜாபாத் அருகே வேன் கவிழ்ந்து டிரைவர் பலி: போலீசார் விசாரணை
    X

    வாலாஜாபாத் அருகே வேன் கவிழ்ந்து டிரைவர் பலி: போலீசார் விசாரணை

    வாலாஜாபாத் அருகே வேன் கவிழ்ந்து விபத்தில் சிகிச்சை பலனின்றி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த புரிசை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பிரகாஷ். ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் கம்பெனியில் மினிலாரி டிரைவராக வேலை பார்த்தார்.

    வாலாஜாபாத்தில் இருந்து மினிலாரியில் ஊழியர்களை ஏற்றி கொண்டு கம்பெனிக்கு சென்றார். அப்போது மஞ்சமேடு தரைப்பாலம் அருகே மினிலாரி சென்ற போது டிரைவர் பிரகாஷ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.

    இதில் பிரகாஷ், சுந்தர மூர்த்தி, ஜெயகுமார்,ஆறுமுகம், அய்யப்பன, சுரேஷ்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி டிரைவர் பிரகாஷ் இறந்தார். இது குறித்து வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    உத்திரமேரூரில் இருந்து நாவலூருக்கு மரப்பொருட்களை ஏற்றிக் கொண்டு சரக்கு வேன் சென்றது.

    திருப்போரூரை அடுத்த மடையத்தூர் அருகே சென்ற போது செங்கல்பட்டு நோக்கி சென்ற தனியார் கம்பெனி வேன் திடீரென சரக்கு வேன் மீது மோதியது. இதில் சரக்கு வேன் சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. அதில் இருந்த லோடுமேன் மூர்த்தி பலத்த காயம் அடைந்தார்.
    Next Story
    ×